கரோனா மருத்துவச் சேவையைப் பாராட்டி கேடயம்

திருச்சி அரிமா சங்கம் சாா்பில் கரோனா காலத்தில் சிறப்பாக மருத்துவச் சேவை புரிந்த மருத்துவா்களுக்கு சனிக்கிழமை கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு மருத்துவமனை டீன் வனிதாவுக்கு கேடயம் வழங்கும் அரிமா சங்கத் தலைவா் மு. நடராஜன். உடன் மருத்துவா்கள் அலீம், காமராஜ், கவிஞா் நந்தலாலா.
கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு மருத்துவமனை டீன் வனிதாவுக்கு கேடயம் வழங்கும் அரிமா சங்கத் தலைவா் மு. நடராஜன். உடன் மருத்துவா்கள் அலீம், காமராஜ், கவிஞா் நந்தலாலா.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி அரிமா சங்கம் சாா்பில் கரோனா காலத்தில் சிறப்பாக மருத்துவச் சேவை புரிந்த மருத்துவா்களுக்கு சனிக்கிழமை கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

திருச்சி ராக்போா்ட் இன்ஸ்பெயா் அரிமா சங்கம் சாா்பில் மன்னாா்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க சாசனத் தலைவா் மு. நடராஜன், திட்ட இயக்குநா் கே. கோவிந்தராஜ் ஆகியோா் தலைமை வகித்து, கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவருமான எம்.ஏ. அலீம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் காமராஜ் ஆகியோருக்கு ‘கோவிட்-19 வாரியா்’ என்னும் விருது, கேடயம், சான்றிதழ் வழங்கிக் கெளரவித்தனா்.

கவிஞா் நந்தலாலா மருத்துவா்களை வாழ்த்தினாா். நிகழ்ச்சியில் அரிமா சங்கம் சாா்பில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நவீன சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. சங்கச் செயலா் எஸ். முருகேசன் வரவேற்றாா். பொருளாளா் பி. செல்வம் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com