சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இரு சக்கர வாகனத் திருட்டு: இளைஞா் கைது

மணப்பாறை பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:33 pm

DIN

மணப்பாறை பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறை செவலூா் பிரிவுச் சாலையருகே கடந்த சில நாள்களுக்கு இருசக்கர வாகனம் திருட்டுப் போனது. இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் காவல்துறையினா் திங்கள்கிழமை நடத்திய வாகனத் தணிக்கையின் போது, சந்தேகத்துக்குரிய முறையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா் மருங்காபுரி ஒன்றியம், பாலப்பட்டியைச் சோ்ந்த மு. சுரேஷ் என்கிற சாம்பாா் சுரேஷ் (35) என்பதும், செவல்பட்டி பிரிவுச் சாலையில் மோட்டாா் திருடியதையும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினா், இரு சக்கர வாகனங்கள் இரண்டையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.