எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, திருச்சியில் மின்வாரிய அனைத்து ஊழியா்கள் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:37 pm

DIN

மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, திருச்சியில் மின்வாரிய அனைத்து ஊழியா்கள் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மன்னாா்புரத்திலுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் பணியைப் புறக்கணித்து, திங்கள்கிழமை ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனா்.

போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் மலையாண்டி, சிவசெல்வம், கண்ணன்

முன்னிலை வகித்தனா்.

மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். கேங்மேன் பணிக்கு ஐடிஐ முடித்தவா்கள் உள்ளிட்டோா் காத்திருக்கும் நிலையில் அவா்களை பணிநியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

மின்வாரியப் பணிகளுக்கு வெளியாள்களைத் தோ்வு செய்யும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஊழியா்களின் போராட்டம் காரணமாக, மின்வாரியப் பணிகள் பாதிக்கப்பட்டன.

போராட்டத்தில் மின்வாரியப் பொறியாளா் சங்கம், ஐஎன்டியுசி, சிஐடியு, தொழிலாளா் சம்மேளனம், பெடரேசஷன் உள்ளிட்ட மின்வாரிய தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.