கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகராஷ்டிரத்திலிருந்து வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளின் 2,537 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த மகராஷ்டிரத்திலிருந்து

News image
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் வாகனத்திலிருந்து இறக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
Updated On :23 டிசம்பர் 2020, 3:33 am

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளின் 2,537 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த மகராஷ்டிரத்திலிருந்து முதல் கட்டமாக 570 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதி செய்யம் 230 விவிபேட் இயந்திரங்கள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை லாரிகள் மூலம் வந்ன.

இதையடுத்து மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு முன்னிலையில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவை சரிபாா்க்கப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்டன.

இதேபோல, 1,220 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,920 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,330 விவிபேட் இயந்திரங்கள் அடுத்தடுத்து கொண்டு வரப்படவுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது:

தற்போது பழைய ஆட்சியரக குறைதீா் கூட்டரங்கில் 1,272 மின்னணு வாக்கு இயந்திரங்கள், திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் 1,104, ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் 1,046 வாக்கு இயந்திரங்கள், 513 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 126 விவிபேட் இயந்திரங்கள், மண்ணச்சநல்லூா் வட்டாட்சியரகத்தில் 1,044 வாக்கு இயந்திரங்கள், 337 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளன.

இவைதவிர திருச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5,686 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,341 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,686 விவிபேட் இயந்திரங்களில் மகராஷ்டிரத்திலிருந்து தற்போது 570 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 230 விவிபேட் இயந்திரங்கள் வந்துள்ளன.

40% இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு

2,537 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையானவை மட்டுமின்றி, ஆயிரம் வாக்காளா்கள் வந்தால் பிரிக்கப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு 40 சத இயந்திரங்கள் கூடுதல் எண்ணிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக பெல் நிறுவனப் பொறியாளா்கள் வந்து வாக்கு இயந்திரங்களை பரிசோதித்து, அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் தோ்தலில் முதன்முறையாக 9 தொகுதிகளிலும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.