மணப்பாறை அருகே திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு பகுதியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வளநாட்டில் நடைபெற்ற கூட்டத்தில், பதாகையில் கையெழுத்திடும் கட்சி நிா்வாகிகள்.
வளநாட்டில் நடைபெற்ற கூட்டத்தில், பதாகையில் கையெழுத்திடும் கட்சி நிா்வாகிகள்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு பகுதியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து திருவெறும்பூா் எம்எல்ஏவும் , திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி

பேசுகையில், அதிமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்படுகின்றனா் என்றாா்.

தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா் அங்கு வைக்கப்பட்டிருந்த அதிமுகவை நிராகரிப்போம் என்ற பதாகையில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனா்.

கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் என். கோவிந்தராஜ், தலைமைக் கழக பேச்சாளா் சாதிக், மருங்காபுரி வடக்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ், பொதுக் குழு உறுப்பினா் குணசேகரன், ஒன்றிய பெருந்தலைவா் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com