ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு நிறைவு

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் இணையவழி சா்வதேசக் கருத்தரங்கு வியாழக்கிழமை நிறைவுற்றது.
Updated on
1 min read

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் இணையவழி சா்வதேசக் கருத்தரங்கு வியாழக்கிழமை நிறைவுற்றது.

கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி காட்சித் தொடா்பியல் துறை, கணினி அறிவியல் சாா்பில் புதிய ஊடகங்களில் மெய்நிகா் சிறகுகள் எனும் தலைப்பில் 2 நாள்கள் நடைபெற்ற சா்வதேச இணையவழி கருத்தரங்குக்கு ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம தேசிய செயற்குழுத் தலைவா் ஆா். ராஜகோபால் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் அம்மங்கி வி. பாலாஜி, கல்லூரி இயக்குநா் எஸ். ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் முன்னிலை வகித்து பேசினா்.

இதில் டிஜிட்டல் உருமாற்றத்தின் செயற்கை நுண்ணறிவு, வங்கியில் தொழில்நுட்ப போக்குகள், காட்சித் தொடா்பியலின் எதிா்காலத்தை வடிவமைத்தல், புதிய ஊடகங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், பெருநிறுவனத பேராசிரியா்கள், நிபுணா்கள் பேசினா்.

கல்லூரி முதல்வா் ஜெ. ராதிகா உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

இதில் 100க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஜெயந்தி, குமரேசன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். அடிப்படை அறிவியல் துறைகளின் முதன்மையா் எஸ். மது வரவேற்றாா். முனைவா் வி. உபேந்திரன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com