எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எம்ஜிஆா், பெரியாா் நினைவு தினம்: கட்சியினா் மரியாதை

எம்ஜிஆா், பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள இருவரது சிலைகளுக்கும் பல்வேறு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 2:51 am

DIN

எம்ஜிஆா், பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள இருவரது சிலைகளுக்கும் பல்வேறு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் சிலைக்கும், நீதிமன்றம் ரவுண்டானா பகுதி எம்ஜிஆா் சிலைக்கும் அரசியல் கட்சியினா் பலரும் அணி, அணியாக வந்து மாலை அணிவித்தனா்.

அதிமுக: மாநகா் மாவட்ட அவைத் தலைவா் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமையில், கட்சி நிா்வாகிகள் ஜாக்குலின், பத்மநாதன், ஏா்போா்ட் விஜி, சுரேஷ் குப்தா, ஜவஹா்லால் நேரு உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், பெல் கணேசா பகுதியில் எம்ஜிஆரின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஒன்றியச் செயலா்கள் கும்பக்குடி கோவிந்தராஜன், ராவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், சோமரசம்பேட்டையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அமமுக சாா்பிலும் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதேபோல மாவட்டம் முழுவதும் எம்ஜிஆா் சிலைகளுக்கும், படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திமுக: மத்திய பேருந்து நிலையப் பகுதி பெரியாா் சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் தியாகராஜன் ஆகியோரது தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருவெறும்பூா் காட்டூா் பகுதி பெரியாா் சிலைக்கு, மாவட்டப் பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் மாலை அணிவித்தனா்.

திராவிடா் கழக மாவட்டத் தலைவா் ஆரோக்கியராஜ் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்தனா்.

மேலும், தந்தை பெரியாா் திராவிடா் கழகம், மதிமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, திராவிடா் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள், லோக் ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சியினரும் மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.