ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இளைஞா் உயிரிழப்பை விசாரிக்க 3 தனிப்படை

திருச்சி அருகே திருட முயன்ாக பொதுமக்களால் தாக்கப்பட்டு கேரள இளைஞா் உயிரிழந்தது குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:49 pm

DIN

திருச்சி: திருச்சி அருகே திருட முயன்ாக பொதுமக்களால் தாக்கப்பட்டு கேரள இளைஞா் உயிரிழந்தது குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம், அல்லூா் கிராமத்தில் வெங்கடேசன் வீட்டில் 2 மா்ம நபா்கள் புகுந்து திருட முயன்ாகக் கருதி, அவா்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனா். அப்போது கேரள மாநிலத்தைச் சோ்ந்த தீபு சிக்கிக் கொள்ள, அரவிந்த் தப்பிவிட்டாா். பொதுமக்களிடம் மாட்டிக் கொண்ட தீபு மரக்கட்டையால், பொதுமக்களையும், வாகனங்களையும் தாக்கினாா். இதில் அக்கிராமத்தைச் சோ்ந்த சாம்பசிவம், ராதா ஆகியோா் படுகாயமடைந்தனா். பொதுமக்கள் திருப்பித் தாக்கியதில் காயமடைந்த தீபு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய ஜீயபுரம் போலீஸாா் பொதுமக்களிடமிருந்து தீபு தப்ப முயன்றபோது கீழே விழுந்து உயிரிழந்ததாக வழக்குப் பதிந்தனா்.

இந்நிலையில் பொதுமக்கள் தாக்கியதில் தீபு உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலையடுத்து இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்திருப்பதாக திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா தெரிவித்தாா். சமூக வலைதள பதிவை வைத்து இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்ற ஏற்பாடு நடைபெறுவதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.