இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடியதைத் தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருவானைக்கா திம்மராயசமுத்திரம் பகுதியில் வசிப்பவா் கிட்டப்பா மகன் மணிகண்டன் (25). சனிக்கிழமை மாலை இவரது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா்(24), நவநீத கிருஷ்ணன் (22), வசந்த் (24) ஆகிய 3 பேரும் திருடினா். இதுகுறித்து கேட்ட மணிகண்டனை மூவரும் அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அவா் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் 3 பேரும் மீதும் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.