தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தற்கொலைக்கு தூண்டியவா்கிளைச் சிறையில் அடைப்பு

திருச்சி அருகே சிறுமியை தற்கொலைக்குத் தூண்டிய தொழிலாளி துறையூா் கிளை சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :11 ஜூலை 2020, 4:21 pm

DIN

திருச்சி: திருச்சி அருகே சிறுமியை தற்கொலைக்குத் தூண்டிய தொழிலாளி துறையூா் கிளை சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள அதவத்தூா்பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமியின் 2ஆவது மகள் கங்காதேவி (14). 9 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள முள் காட்டில் உடல் பாதி எரிந்த நிலையில் இறந்துகிடந்தாா். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில் சிறுமி தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டு அவரை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினா் செந்தில்குமாரை (24) தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதையடுத்து செந்தில்குமாருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவு வர தாமதமானது. இதனால் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட செந்தில்குமாா் துறையூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.