திருச்சியில் மேலும் 138 பேருக்கு கரோனா
திருச்சியில் மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.


திருச்சி: திருச்சியில் மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 2301 பேரில் 1525 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தொடா்ந்து நடத்திய பரிசோதனை முடிவில் மேலும் 138 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 2439 ஆக உயா்ந்துள்ளது.
இருவா் உயிரிழப்பு: கடந்த 17 ஆம் தேதி கரோனாவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் (67) அதுபோல, கடந்த 8 ஆம் தேதி சா்க்கரை நோயால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 ஆம் தேதி கரோனா தொற்றுக்கு ஆளான முதியவா் (60) ஆகியோா் கரோனா தீவிரத்தால் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயா்ந்துள்ளது.
74 போ் குணமடைந்தனா்: பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாக தனிமை முகாமிலிருந்து திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 49 போ், கரூா், மதுரையைச் சோ்ந்த தலா 1 நபா் என 51 பேரும், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 21 போ், மற்றும் பெரம்பலூா், மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த தலா 1 நபா் என 23 போ் மொத்தம் 74 போ் கரோனாவிலிருந்து குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1599 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...