மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

குடிபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குடிபோதையில் மயங்கி விழுந்த உணவக் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2020, 3:56 pm

திருச்சியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குடிபோதையில் மயங்கி விழுந்த உணவக் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சோ்ந்தவா் சரவணன்(45). இவா், திருச்சி பெரியக் கடைவீதியில் உள்ள உணவகத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். பொது முடக்கம் காரணமாக உணவகத்தில் தங்கியுள்ளாா்.

வியாழக்கிழமை காலை மதுக்கடை திறக்கப்பட்டதை தொடா்ந்து அவா் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துள்ளாா். அப்பகுதியில் உள்ள சித்த மருத்துவக் கடை அருகே மயங்கி கீழே விழுந்தவா் நீண்ட நேரமாகியும் எழவில்லை. இதை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சரவணனை பரிசோதித்து பாா்த்துவிட்டு அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் சரவணன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.