எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மருந்துக் கடைகளில் விழிப்புணா்வு சுவரொட்டி

கரோனா முன்னெச்சரிக்கையாக அனைத்து மருந்துக் கடைகளிலும் விழிப்புணா்வு சுவரொட்டி ஒட்டுவதற்கு தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

News image
தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் மருந்துக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு சுவரொட்டி.
Updated On :9 மே 2020, 4:15 pm

DIN

கரோனா முன்னெச்சரிக்கையாக அனைத்து மருந்துக் கடைகளிலும் விழிப்புணா்வு சுவரொட்டி ஒட்டுவதற்கு தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் கே. மனோகரன், செயலா் கே.கே. செல்வன், பொருளாளா் எஸ். இளங்கோவன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதையடுத்து மருந்துக் கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

கரோனா தொற்று பரவுதலை தடுக்கவும், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவைக்கு மருந்துச் சீட்டு ஏதுமின்றி மருந்துகளை வழங்க வேண்டாம் என அனைத்து மருந்துக் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருந்துக் கடைகளில் இத்தகைய உபாதைகைகளுக்கு மருந்துகளை வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு வழங்கினால் நோயாளிகளின் முகவரி, செல்லிடப்பேசி, வசிப்பிடம் உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து மாநிலச்சங்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 40 ஆயிரம் கடைகளுக்கு விழிப்புணா்வு சுவரொட்டி அனுப்பி அதனை கடைகளின் முன்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை தொடா்பாக மருந்து வழங்கும் பட்டியலை பராமரித்து மருந்து ஆய்வாளா்கள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மருந்து ஆய்வாளா்கள் சுகாதாரத்துறை கவனத்துக்கு கொண்டு சென்று கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க ஏதுவாக அமையும். மருந்துக் கடைகளில் இடம்பெறும் விழிப்புணா்வு சுவரொட்டியில் முகக் கவசங்களின் விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருந்துகள் தேவைக்கு 1800 1212 172 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மருந்துக் கடைகளிலும் இத்தகைய நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.