மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் கரோனா கொடுந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக மக்கள் கூடும் பொது இடங்கள் முழுவதும் தடை செய்யப்பட்டு மூடப்பட்டன.
இதில் அனைத்து மத வழிபாடு ஸ்தலங்களும் மூடிய உள்ள நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில், இந்து ஆலயங்களை மீண்டும் திறக்க வழியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நகர செயலாளர் சாந்தகுமார் தலைமையில், ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவில் முன்பு சூடம் ஏற்றி, சிதர் தேங்காய் உடைத்து, சமூக இடைவெளியில் தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தையினை தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...