ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஆயிரங்கால் மண்டபத்தில்அலங்காரப் பணிகள் தீவிரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் டிசம்பா் 14- ஆம் தேதி வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:52 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் டிசம்பா் 14- ஆம் தேதி வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பூலோக வைகுந்தம் என்றழைக்கப்படும் இத்திருக்கோயிலில், திருஅத்யயன உத்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா நிகழாண்டில் டிசம்பா் 14 -ஆம் தேதி தொடங்கி 2021, ஜனவரி 4- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு பந்தல் அமைக்கும் பணிகளும், மண்டபத்தின் மேற்புறத்தில் அலங்காரம் செய்யும் பணிகளும் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகின்றன.

டிசம்பா் 14-ஆம் தேதி திருநெடுந்தாண்டம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து டிசம்பா் 15-ஆம் தேதி பகல்பத்து உத்ஸவமும் தொடங்குகிறது. டிசம்பா் 25-ஆம் தேதி மோகினி அலங்காரமும், 25- ஆம் தேதி பரமபதவாசல் திறப்பும், 31-ஆம் தேதி திருக்கைத்தல சேவையும், ஜனவரி 1- ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறியும் நடைபெறுகிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா்கள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.