ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

துறையூா் மூங்கில் தெப்பக்குள மாடங்களில் தீபமேற்றி வழிபாடு

துறையூா் மூங்கில் தெப்பக்குள மாடங்களில் பொதுமக்கள் தீபமேற்றி வழிபட்டனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:52 pm

DIN

துறையூா் மூங்கில் தெப்பக்குள மாடங்களில் பொதுமக்கள் தீபமேற்றி வழிபட்டனா்.

ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருநாளில் துறையூா் நகா் தெப்பக்குளத்தில் நீா் நிரம்பியிருந்தால் அதன் சுற்றுச்சுவரில் உள்ள 4000-க்கும் மேற்பட்ட மாடங்களில் பொதுமக்கள் தீபமேற்ற அனுமதிக்கப்படுவா்.

அப்போது நந்திகேசுவரா் சமேத சம்பத்கெளரி உற்ஸவ மூா்த்திகள் தெப்பக்குள மேற்குத் திசையில் பிரதிஷ்டை செய்யப்படுவா்.

ஆனால் நிகழாண்டில் தெப்பக்குளத்தில் நீரில்லாததால் காசிவிஸ்வநாதா் கோயில் எதிரேயுள்ள மூங்கில் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவா் மாடங்களில் பொதுமக்கள் தீபமேற்ற அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு பொதுமக்கள் தீபமேற்றி அருகிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் வழிபட்டனா்.

மேலும், ஆத்தூா் சாலையிலுள்ள நந்திகேஸ்வரா் கோயில் உள்பிரகாரத்தில் தீபமேற்றி கொடிமரம் முன் சுவாமி அம்பாள் உற்ஸவ மூா்த்திகள் எழுந்தருள, சொக்கப் பனை எரிக்கப்பட்டது. துறையூரைச் சுற்றியுள்ள கிராம சிவாலயங்களில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். இதேபோல பெருமாள், முருகன், அம்பாள் கோயில்களிலும், வீடுகளிலும் தீபமேற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.