ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் உதவி

துறையூர் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு அந்த வழியாக சென்ற அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதவி புரிந்துள்ளார்.

News image
விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு உதவிபுரிந்த அதிமுக முன்னாள் அமைச்சர்.
Updated On :26 அக்டோபர் 2020, 9:03 am

DIN

துறையூர் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு அந்த வழியாக சென்ற அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதவி புரிந்துள்ளார்.

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி திங்கள்கிழமை துறையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள காரில் சென்றார். அவருடன் மற்ற கட்சி நிர்வாகிகளும் காரில் சென்றனர். இவர் கரட்டாம்பட்டி கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி படுகாயத்துடன் சாலையோரம் இளைஞர் ஒருவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். 

இதனை கவனித்த பரஞ்சோதி தனது வாகனத்தை நிறுத்தி அருகில் சென்று வாகனத்தில் இருந்த தண்ணீரைக் கொடுத்து விசாரித்தார். அந்த இளைஞர் அருகிலுள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ்(26) என்பதும், அரிசி மூட்டை எடுத்துக்கொண்டு பைக்கில் தனது சொந்த ஊர் சென்று கொண்டிருந்த போது திடீரென நாய் குறுக்கிட்டதால் அதன் மீது மோதி கீழே விழுந்து, முகம், கை, கால்களில் படுகாயமடைந்திருந்தார் என்பதும் தெரிந்தது. 

இதனையடுத்து இளைஞருக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைத்திட தன்னுடன் துறையூர் வந்து கொண்டிருந்த நிர்வாகி ஒருவரின் காரில் அந்த இளைஞரை துறையூர் அரசு மருத்துவமனை அனுப்பினார். பரஞ்சோதியும், அவருடன் வந்தவர்களும் அடுத்தடுத்து விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தியதால் அந்த பகுதியில் குடியிருப்போர், கால் நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காயமடைந்த அந்த இளைஞருக்கு பரஞ்சோதியும், அதிமுகவினரும் செய்த உதவியை கவனித்த மக்கள் அவர்களனைவரும் பாராட்டியவாறு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.