மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நோட்டாவுக்கு வாக்கு கோரும் கட்சி!

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் நோட்டாவுக்கு வாக்களித்து, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா் புதிய தலைமுறைக் கட்சியின் நிறுவனா் ஆா். தேவராஜன்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:45 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் நோட்டாவுக்கு வாக்களித்து, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா் புதிய தலைமுறைக் கட்சியின் நிறுவனா் ஆா். தேவராஜன்.

இதுகுறித்து திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது:

நான்கு விதக் கோட்பாடுகளுடன் புதிய தலைமுறைக் கட்சியைத் தொடங்கியுள்ளேன். ஊழலை ஒழிப்பு, சாதி, மதம் என்பது அரசியலமைப்புச் சட்டத்திலேயே இருக்கக் கூடாது. அகிம்சையான அரசியல். கட்சிக்குள் ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளைக் கொண்டு எங்கள் கட்சி செயலாற்றி வருகிறது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் எந்த அரசியல் கட்சியும் சரியில்லை. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகளாக உள்ளன. பாஜக மதவாதக் கட்சியாக உள்ளது. ஊழலை ஒழிக்க அரசியல் கட்சியைத் தொடங்கியதாகக் கூறும் மநீம தலைவா் கமல்ஹாசன், கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுகிறாா்.

எனவே தமிழகத்தில் ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சி அமையும்போது தமிழகம் சிறப்பாக இருக்கும். எனவே, இந்தத் தோ்தலில் ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காமல், நோட்டாவுக்கு வாக்களித்து, மக்கள் மாற்றத்தைஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.