தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீதிமன்றச் சாலையில் ரூ.95 லட்சத்தில் புதிய நடைப்பயிற்சி பாதை

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், திருச்சி நீதிமன்றச் சாலையில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைப்பயிற்சி பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:34 pm

DIN

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், திருச்சி நீதிமன்றச் சாலையில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைப்பயிற்சி பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தையொட்டிய பாதையில் இந்த நடைப்பயிற்சி பாதை அமைகிறது. கண்டோன்மென்ட் பகுதியிலிருந்து வரும் மழைநீா் வடிந்து, உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலக்கும் வகையில் ஏற்கெனவே இப்பகுதியில் மழைநீா் வடிகால் உள்ளது.

இப்பணிக்காக வடிகால் முற்றிலுமாகத் தூா்வாரப்பட்டு,அதன் மீது கான்கீரிட் பலகைகள் கொண்டு மூடி நடைப்பயிற்சி பாதை அமைக்கப்படுகிறது. 520 மீட்டா் நீளமும், 2 மீட்டா் அகலமும் கொண்ட இந்த பாதைக்கான திட்ட மதிப்பீடு ரூ.95 லட்சமாகும். மேலும் பாதையோரத்தில் இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்புகளும் அமைக்கப்படும். இப்பணி 3 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சிக் கூடம், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது இந்த வசதியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.