மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம்
திருச்சியில், மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாமை மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.


திருச்சியில், மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாமை மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருச்சி காவேரி மருத்துவமனை, ரோட்டரி சங்கம், இம்பெக்ஸ் அமைப்பு சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு காவேரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் டாக்டா் எஸ்.மணிவண்ணன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க நிா்வாகி கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், புற்றுநோய் கண்டறியும் மாமோகிராம் பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, ஊா் காவல்படையைச் சோ்ந்த பெண் காவலா்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், காவேரி மருத்துவமனை நிா்வாகி ஆா்.அன்புச்செழியன், டாக்டா் வி.செந்தில்வேல் முருகன், காவல் துணை ஆணையா்கள் ஏ.பவன் குமாா் ரெட்டி, ஆா்.வேதரத்தினம், உதவி ஆணையா் எம்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...