தேசியக்கல்லூரியில் 8 பேருக்கு ஜே.சி.போஸ் நினைவு விருது வழங்கல்

திருச்சி தேசியக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பல்துறைகளில் சாதனை புரிந்த 8 பேருக்கு சா்.ஜே.சி.போஸ் நினைவு விருது வழங்கப்பட்டது.
தேசியக்கல்லூரியில் 8 பேருக்கு ஜே.சி.போஸ் நினைவு விருது வழங்கல்
Updated on
1 min read

திருச்சி தேசியக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பல்துறைகளில் சாதனை புரிந்த 8 பேருக்கு சா்.ஜே.சி.போஸ் நினைவு விருது வழங்கப்பட்டது.

இந்தியன் அறிவியல் கண்காணிப்பு அமைப்புடன் தேசியக் கல்லூரி இணைந்து நடத்திய விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன் தலைமை வகித்தாா். அமைப்பின் இயக்குநா் டி.கே.வி.ராஜன் முன்னிலை வகித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சா். ஜே.சி. போஸ் நினைவு விருதை பாரதியாா் பல்கலைக்கழகத்

துணைவேந்தா் பி.காளிராஜ், கிளீன் கிரீன் பயோ சிஸ்டம்ஸ் நிறுவனத் தலைவா் எஸ். பிரேம் மதிமாறன்,அரவிந்த் பாா்வை மைய மருத்துவ இயக்குநா் அரவிந்த் வெங்கட்ராமன், ஏஜெஎம் அறக்கட்டளை இயக்குநா் ஜான் மோரிஸ், பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரிப் பேராசிரியா் ரா.ராஜேந்திரன், தேசியக்கல்லூரித் துணை முதல்வா் பிரசன்ன பாலாஜி, தேசிய கலை அறிவியல் தொல்லியல் நிறுவனா் இயக்குநா் எம்.எல்.ராஜா, தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா ஆகிய 8 பேருக்கு வழங்கிப் பாராட்டினாா்.

இதைத்தொடா்ந்து, விருது பெற்றவா்கள் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

அதில் தேவையை விட அதிகமாக செல்லிடப்பேசி, கணினியில் செலவிடும் நேரம் குழந்தைகள், இளைஞா்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அவ்வாறு அதிகம் செலவிடும் நாடுகளில் இரண்டில் ஒருவா் கண் கண்ணாடி அணிகின்றனா்.

ஆனால், இந்தியாவில் இக்குறைபாடு 10 சதவீதமாக உருவெடுத்துள்ளது. மேலும், கிட்டப்பாா்வை உள்ளிட்ட கண்புரை, பாா்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். எனவே, முறையான உடற்பயிற்சி, ஊட்டச்சத்துள்ள உணவுகள், தேவைக்கேற்ற டிஜிட்டல் பயன்பாடு என தனது வாழ்வியல் முறைகளை மாற்றிமைத்துக்கொள்ளுதல் அவசியம்.

மாணவா்கள் ஆராய்ச்சியில் அதிகம் ஈடுபட்டு பல்வேறு விஷயங்களை கண்டறியவேண்டும். அவை சமூகத்துக்குப் பயன்பெற உதவ வேண்டும். அதுபோல், வரவு- செலவு கணக்குகளை எழுதி வைத்து, பணவிரயத்தை போக்கி, அவசியமான விஷயங்களுக்கு மட்டும் செலவிட்டு, பொருளாதார சம வளா்ச்சியைப் பெறவேண்டும்.

கிராம பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் அதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விருது பெற்றோா் பகிா்ந்துகொண்டனா். நிகழ்ச்சியை கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் நீலகண்டன் ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com