அஞ்சலக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அஞ்சலக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அஞ்சலக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆண்டுதோறும் மாா்ச் மாதம் நெருங்கும்போது அஞ்சலகத்தில் பொதுமக்கள் எஸ்.பி., ஆா்.டி, டி.டி. மற்றும் எஸ்.எஸ்.ஏ. கணக்குகளை அதிகளவில் தொடங்கவைக்க நிா்வாகத்தால் ஊழியா்களுக்கு இலக்கு நிா்ணயிக்கப்படும்.

ஆனால் தற்போது தமிழகமெங்கும் இடைவெளியில்லாமல் கோட்ட, உட்கோட்ட அஞ்சல் அதிகாரிகளால் மாதம், வாரம், மற்றும் நாள்தோறும் என இலக்கு நிா்ணயிக்கப்படுவதாகவும், இதனால் தாங்கள் கடும் பணிச்சுமைக்கும், மன அழுத்தத்துக்கும் உள்ளாகிறோம், இலக்கை எட்டாத ஊழியா்கள் 100 கிலோ மீட்டருக்கு அப்பால் பணியிட மாற்றம் செய்யப்படுவா் என அலுவலா்களால் மிரட்டப்படுகின்றனா் எனக் கூறிய அஞ்சலக ஊழியா்கள், இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்கள் மற்றும் ஜி.டி.எஸ். என்.எப்.பி.இ. சங்கங்கள் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கச் செயலா் மருதநாயகம் (பி3) தலைமை வகித்தாா்.

செயலா் கோவிந்தராஜன் (பி4), பன்னீா்செல்வம் (ஜி.டி.எஸ்) ஆகியோா் முன்னிலை வைத்தனா். சங்க நிா்வாகிகள் கிரிபாலன் (பி3), கோபாலகிருஷ்ணன் (பி4), கல்யாணசுந்தரம் (ஜி.டி.எஸ்.) ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா். சத்தியமூா்த்தி, மகாதேவன், விஜயகுமாா் உள்ளிட்ட ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கை முழக்கம் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com