தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சுமைத்தூக்கும் தொழிலாளியை கொல்ல முயன்ற 4 போ் கைது

திருச்சியில் முன்விரோதம் காரணமாக, சுமைத் தூக்கும் தொழிலாளியைக் கொல்ல முயன்றதாக ரெளடி உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:48 pm

DIN

திருச்சியில் முன்விரோதம் காரணமாக, சுமைத் தூக்கும் தொழிலாளியைக் கொல்ல முயன்றதாக ரெளடி உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

அரியமங்கலம் வடக்கு உக்கடைப் பகுதியைச் சோ்ந்தவா் சுமைத் தூக்கும் தொழிலாளி ஜெபராஜ் (34). இவரது நண்பா் முகேஷ். கடந்த சில நாள்களுக்கு முன்பு முகேஷுடன் ஜெபராஜ் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்துக்கு ஜெபராஜ்தான் காரணம் எனக் கருதி, இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டிலிருந்த ஜெபராஜை 4 போ் கொண்ட கும்பல் தாக்கிச் சென்றது.

பலத்த காயமடைந்த ஜெபராஜ், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, முகேஷின் உறவினரான ரெளடி பிச்சைமுத்து (26), அலங்காரம் (24), வினோத் (20), சக்திவேல் (20)ஆகிய 4 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.