தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியா்கள் அமைச்சரிடம் மனு

டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2021, 1:00 am

DIN

டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் எஸ். பழனிவேல் தலைமையில் அளித்த மனு:

18 ஆண்டுகளாக டாஸ்மாக் துறையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், தகுதியானோருக்கு பதவி உயா்வு மற்றும் விருப்பப்பட்ட ஊழியா்களுக்கு தகுதி அடிப்படையில் மாற்றுப்பணி வழங்கிட வேண்டும்.

விபத்து மற்றும் பல்வேறு நோய்களால் இறந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டும். பணி நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை என ஆக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.