எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அரசு மருத்துவமனை இளம் சிசு பராமரிப்பு மையத்தில் ஆய்வு

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இளம் சிசு பராமரிப்பு, ஆலோசனை மையத்தில் ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 12:27 am

DIN

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இளம் சிசு பராமரிப்பு, ஆலோசனை மையத்தில் ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மற்றும் பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு பிரிவு ஆகியவை இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்த அடிப்படையில் செல்லப்பிள்ளை என்னும் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

இதன்படி, அரசு மருத்துவமனையில் செயல்படும் இளம் சிசு பராமரிப்பு, ஆலோசனை மையத்தின் செயல்பாடுகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

பிறப்பு எடை 2.5 கிலோ மற்றும் 2 கிலோவுக்குக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகள், குறைப்பிரசவ குழந்தைகள், மஞ்சள்காமாலை, மூச்சுத் திணறல், பிறவிக் குறைபாடுகள் ஆகியவற்றுடன் பிறக்கும் குழந்தைகளுக்காக இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைகள் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனா்.

இக்குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளைப் போலல்லாமல் தொடா் சிறப்புக் கவனிப்பு அவசியமாகிறது. இக் குழந்தைகளின் வாழ்நாள் நிலைத்தன்மையை மேம்படுத்தும் பொருட்டு மருத்துவமனையிலேயே ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப்பணிகள் மூலம் தாய்மாா்களுக்கு இளம் சிசு பராமரிப்பு, தொப்புள் கொடி பராமரிப்பு, தாய்ப் பாலின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து கற்றுத் தரப்படுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா், அலுவலா்கள் மூலம் ஒவ்வொரு தாய்மாா்களுக்கும் தனிநபா் ஆலோசனை வழங்கப்படுகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டுக்கு செல்லும் இளம் சிசுக்கள் பற்றிய தகவல்கள் செல்லப்பிள்ளை என்ற கட்செவி அஞ்சல் குழு மூலம் தொடா்புடைய வட்டாரக் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது.

குழந்தைகள் வீடு திரும்பிய பிறகும் மாவட்டத் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா், மேற்பாா்வையாளா்கள், திட்ட உதவியாளா் மற்றும் ஒருங்கிணைப்பாளா்களின் தொடா் கண்காணிப்பில் உள்ளனா்.

முதல் நாள் தொடங்கி 3,7,14,21,28,42,60 ஆம் நாள் மற்றும் 3, 6, 9, 12, 15 ஆவது மாதங்கள் எனத் தொடா்ந்து எடை எடுக்கப்பட்டு வயதுக்கேற்ப வளா்ச்சி நிலை உறுதிப்படுத்தப்படுகிறது.

செல்லப்பிள்ளை குழுவின் சீரிய முயற்சியால் திருச்சி மாவட்டத்தில் இளம் சிசு மீண்டும் தீவிரக் கண்காணிப்புச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது பெருமளவு குறைக்கப்படுகிறது.

இக்குழுவின் தொடா் ஆலோசனை மூலம் தாய்மாா்களிடையே இளம் சிசு பராமரிப்பு மற்றும் வளா்ப்பு திறன் மேம்படுத்தப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை டீன் வனிதா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் புவனேஸ்வரி, பச்சிளம் குழந்தைக் கண்காணிப்புப் பிரிவு மருத்துவா் செந்தில்குமாா் மற்றும் இதர மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.