எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி வழங்குவது குறித்து ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூலை 2021, 12:27 am

DIN

 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி வழங்குவது குறித்து ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், குழந்தைகளைப் பெரும்பாலும் பாதிக்கும் நியுமோகோக்கல் நிமோனியா பாக்டீரியாவால் ஏற்படும் ஒருவித தொற்று நோய் குறித்தும், இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சுவாசத் துளிகள் மூலம் பரவும் இத்தொற்று கடுமையாக இருந்தால் குழந்தைகளின் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்பதால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நியுமோகோக்கல் காஞ்சூட் தடுப்பூசி வழங்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி பி.சி.வி. 6 வாரங்கள், 14 வாரங்கள் மற்றும் மீண்டும் 9ஆம் மாதத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. நியுமோகோக்கல் நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த பி.சி.வி. தடுப்பூசியின் மூன்று தவணைகளையும் அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசி பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி குழந்தையின் வலது தொடையில் நடுப்பகுதி உள் தசையில் போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்வில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் லட்சுமி, துணை இயக்குநா் ராம்கணேஷ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா, நகா்நல அலுவலா் யாழினி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.