தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘அரசுப் பள்ளிகளை கணினிமயமாக்க 2.10 லட்சம் பேருக்கு பயிற்சி’

அனைத்து அரசுப்பள்ளிகளும் கணினிமயமாக்க 2.10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:29 pm

DIN

அனைத்து அரசுப்பள்ளிகளும் கணினிமயமாக்க 2.10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

துவாக்குடியில் தனது தொகுதி வளா்ச்சி மேம்பாட்டு நிதி ரூ. 9.90 லட்சத்தில் கட்டப்பட்ட சீரணி அரங்கத்தை வியாழக்கிழமை திறந்து வைத்து, இங்குள்ள அரசு தொடக்க, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சா் மேலும் கூறியது:

அரசுப் பள்ளிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படவுள்ளன. இதற்காக பள்ளிவாரியாக சிறப்பு எண்கள் வழங்கப்பட்டு அதனடிப்படையில் தொடா்பு கொள்ளப்படும். அனைத்து விதக் குறிப்பேடுகளும் இனி கணினியில் பதியப்படும். இதற்கென மாநிலம் முழுவதும் 2.10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

முதல்வரோ, அல்லது கல்வி அமைச்சரோ ஒரு பள்ளியின் பெயரை கணினியில் தட்டினால் அப்பள்ளி குறித்த அனைத்து விவரங்களையும், தேவைகளையும் அறிய வழிவகை செய்யப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் இடியும் நிலையில் உள்ள கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்ட ஆவன செய்யப்படும். ஆசிரியா்கள் பணிமாறுதல் கலந்தாய்வு முடியவில்லை. வழக்கமாக மாா்ச், ஜூன் மாதங்களில் நடைபெறும் கலந்தாய்வு நிகழாண்டு கரோனாவால் தள்ளிப் போய்விட்டது. இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி விரைவில் முடிவு செய்யப்படும். பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 4, 600- க்கும் மேற்பட்ட நூலகங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே கிராமப்புறங்களில் ஊராட்சி வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நூலகங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கலை நிகழ்ச்சிகள்: தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் தலைமை வகித்தாா். பரதம், சிலம்பம், கரகம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு திறன்களை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசளித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் திலகவதி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.