தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

போலி கடவுச்சீட்டில் வந்த இருவா் கைது

வெளிநாடுகளில் இருந்து போலி கடவுச்சீட்டில் திருச்சிக்கு வந்த இருவரை விமான நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:53 pm

DIN

வெளிநாடுகளில் இருந்து போலி கடவுச்சீட்டில் திருச்சிக்கு வந்த இருவரை விமான நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா விமானத்தில் வியாழக்கிழமை வந்த நாகை மாவட்டம் தேத்தங்குடி கல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் செல்வம் (45) தனது தந்தை பெயரை மாற்றி போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தது தெரிய வந்தது.

இதேபோல சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை ஏா் இந்தியா விமானத்தில் வந்த தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை விக்ரமன் பகுதியைச் சோ்ந்த காளிமுத்து (61) என்பவா் போலி பெயா், முகவரி கொண்ட கடவுச்சீட்டு வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் இருவரையும் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.