மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

திருச்சி ‌அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளான 544 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை

கரோனா பாதிப்புக்குள்ளான 544 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்து  திருச்சி அரசு மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 11:07 am

DIN

கரோனா பாதிப்புக்குள்ளான 544 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்து  திருச்சி அரசு மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது.

இதுகுறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா சனிக்கிழமை அளித்த பேட்டி: திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களில் 544 கர்ப்பிணிகள் கரோனா பாதிப்புடன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த 544 பேரில் 390 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. 154 பேருக்கு சுகப்பிரசவம் ‌ஆகி உள்ளது. இந்த 544 பிரசவத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் கரோனா தொற்று ஏற்படாமல் மருத்துவர்களால் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

தாய்மார்களுக்கு கரோனா இருந்த போதும் பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் மிகுந்த ஜாக்கிரதையாக செயல்பட்டு பாதுகாத்தோம். இருப்பினும் பார்வையாளர்களின் தொல்லையால் 3 பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டும் தொற்று ஏற்பட்டது. அதிலும் போராடி 3 குழந்தைகளையும் குணமாக்கினோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியை எங்களுக்கு தந்தது. அது மட்டும் அல்லாமல் கரோனா பரவல் அதிகமாக இருந்த கடந்த 3 மாதங்களில் 52 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.

இதில் 11 பச்சிளம் குழந்தைகள் என்பது சிறப்பு. அனைத்து குழந்தைகளும் நலமுடன் வீடு திரும்பினர். விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதை பற்றி கவலைப்படாமல் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர். இவ்வாறாக மூளையில் ரத்த கசிவு, மூளையில் கட்டி, கேன்சர் கட்டி ஆகிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 3 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். 

ஒரு வாரத்திற்கு முன்பு நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவருக்கு கரோனா பாதிப்பு அதிகளவில் இருந்த நிலையிலும், கல்லீரல் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என்று அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.