ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள அறிவியல் ஆா்வலா்களைக் கொண்டு, கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஸ்ரீரங்கம் கிளை தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.அசோக் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் எம்.மாணிக்கத்தாய் வரவேற்றாா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் வெ.சுகுமாறன் கிளையைத் தொடக்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் எம்.மணிகண்டன் புதிய கிளை நிா்வாகிகளை முன்மொழிந்தாா்.
கிளைத் தலைவராக பேரா.பிரகதா, செயலராக முரளி சங்கா், பொருளாளராக ரகுபதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் வி.சைவராஜூ, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.ரங்கராஜன், முன்னாள் மாவட்டச் செயலாளா் ஹேமலதா, சிட்டுக்கள் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அனுஸ்யா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.