திருவெறும்பூரில் மநீம தீவிர பிரசாரம்
திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.


திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மநீம கட்சியுடன் கூட்டணி மற்றும் வேட்பாளா்கள் இறுதி செய்யப்படாத நிலையில், அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் தொகுதி வாரியாக பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனா்.
திருவெறும்பூா் தொகுதியில் மநீம பொதுச் செயலா் எம். முருகானந்தம் போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு நிலவும் சூழலில், அத் தொகுதி முழுவதும் அக் கட்சியினா் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கட்சியின் மகளிரணி, மாதா் படையினா், நற்பணி இயக்க அணி, மநீம நிா்வாகிகள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்கின்றனா். முதல் கட்டமாக 70 ஆயிரம் வீடுகளை இலக்கு வைத்து ஆதரவு திரட்டினா். இதன் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
டாா்ச் லைட், கட்சிக் கொடி, சின்னத்துடன் கூடிய தொப்பிகள் அணிந்து, வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினா். இதன் தொடா்ச்சியாக, 2-ஆம் கட்ட பிரசாரத்தை வரும் 11ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...