புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கேட்பாரற்றுக் கிடந்த 1,150 கிலோ ரேஷன் அரிசி

மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த 23 ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:33 pm

DIN

மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த 23 ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

மணப்பாறை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் வசிக்கும் கட்டடத் தொழிலாளி பெ. செல்வம் வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் கடந்த புதன்கிழமை இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில் வட்டாட்சியா் த. சேக்கிழாா், வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வி தலைமையிலான வருவாய்த் துறையினா், காவல் துறையினா் சென்று அங்கு 23 மூட்டைகளில் இருந்த 1150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அந்த அரிசி மணப்பாறை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு வியாழக்கிழமை மணப்பாறை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் சோ்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.