நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை

திருச்சி பிராட்டியூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:39 pm

DIN

திருச்சி பிராட்டியூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த அலுவலகத்தில் தீபாவளியையொட்டி பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளா்கள் சேவியா் ராணி, அருள்ஜோதி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மாலை இங்கு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கிருந்த அலுவலக பணியாளா்கள், பதிவுக்காக வந்திருந்தோா் உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணையின்போது 4 இடைத் தரகா்களிடமிருந்து ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தப் பணத்தை அவா்கள் யாரிடம் கொடுக்க கொண்டு வந்திருந்தனா் என தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.