புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணப்பாறை பொன்னணியாறு அணையின் நீர்மட்டம் 29 அடியாக உயர்வு

திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னணியாறு அணை 29 அடி உயரத்தை எட்டியது. ஒரே நாளில் பெய்த மழையில் 5 அடி உயர்ந்துள்ள நீர் மட்டம் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

மணப்பாறை பொன்னணியாறு அணை.

Updated On :28 செப்டம்பர் 2021, 7:23 am

DIN

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னணியாறு அணை 29 அடி உயரத்தை எட்டியது. ஒரே நாளில் பெய்த மழையில் 5 அடி உயர்ந்துள்ள நீர் மட்டம் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது பொன்னணியாறு அணை. 313 ஏக்கரில் அமைந்துள்ள 51 அடி நீர் மட்ட கொள்ளளவு கொண்ட இந்த அணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களின் 2500 ஹெக்டர் விளைநிலங்களின் பாசன நீர் ஆதாரமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்பட்ட கடும் வறட்சியால் இந்த அணையின் நீர் வரத்து முழுமையாக குறைந்து நீர் திறப்பு என்பதே இல்லை என்ற சூழ்நிலை உருவானது. பாசன நீர் ஆதாரமும் இல்லாமல், பொதுமக்களின் சுற்றுலா தலமாகவுமின்றி அணை வெறிச்சோடி கிடக்கிறது.

Story image

அணை நீர் தேங்கும் பகுதி கரூர் மாவட்டத்தை சேர்ந்ததாகவும், பாசனப்பகுதி திருச்சி மாவட்டத்தை சேர்ந்ததாகவும் இருப்பதால் இரு மாவட்டத்திலும் இதற்கு எந்த முன்னுரிமையும் தரப்படாமல் அணை களையிழந்து காணப்படுகிறது. 51 அடி கொள்ளளவில் 23 அடிகள் நீர் இருக்கும் அணையில் சுமார் 17 அடிக்கு மேல் சேறும் சகதியுமாகவும், வண்டல் மண்ணாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வப்போது அணையில் நீர்மட்டம் உயர்வதும், பின் குறைந்து வருவதும் வழக்கமான ஒன்றாக இருந்தபோதிலும், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் அணையில் 23.64 அடி இருந்த நீர்மட்டம் தற்போது 5 அடி உயர்ந்து 28.72 அடியாக இருந்து வருகிறது. சுமார் 120 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 15.71 மி.க.அடியிலிருந்து 25.148 மி.க.அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாதபோதும், அப்பகுதியில் ஒரே நாளில் 55 மிமீ மழை பெய்த நிலையில் நீர் மட்டம் 5 அடி உயர்ந்திருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.