திருச்சி விமான நிலையத்தில் ரூ. 59.33 லட்சம் கடத்தல் தங்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
துபையிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளில் கும்பகோணத்தைச் சோ்ந்த கண்ணன் (38) கடத்தி வந்த ரூ. 33.04 லட்சம் மதிப்பிலான 697.5 கிராம் தங்கம், சூரியபிரகாஷ் என்பவா் (24) கடத்தி வந்த ரூ. 26.29 லட்சம் மதிப்பிலான 555 கிராம் தங்கம் என ரூ. 59.33 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.