ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மணப்பாறை கே.உடையாப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 650 காளைகள் பங்கேற்பு

மணப்பாறை அடுத்த கே.உடையாப்பட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூய பனி மாதா பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்று

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 8:27 am

மணப்பாறை: மணப்பாறை அடுத்த கே.உடையாப்பட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூய பனி மாதா பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது, போட்டியில் 650-க்கும் மேற்பட்ட காளைகளும், 350-க்கும் மேற்பட்ட காளையர்களும் களம் காணும் போட்டியினை வருவாய் வட்டாட்சியர் எஸ்.கீதாராணி துவக்கி வைத்துள்ளார். 

Story image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.உடையாப்பட்டியில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூய பனி மாதா பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற்று வருகிறது. ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து, வாடிவாசல் வழியாக ஊர் காளைகள் அவிழ்க்கப்பட்டதையடுத்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்திருக்கும் 650-க்கும் மேற்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு வருகிறது. 

Story image

காளைகளை திமில் பிடித்து தழுவ 350 காளையர்கள் 50, 50 தொகுப்பாக களம் காணுகின்றனர். போட்டியினை ஜல்லிக்கட்டு உறுதிமொழிக்கு பின் வருவாய் வட்டாட்சியர் எஸ்.கீதாராணி துவக்கி வைத்துள்ளனர். 

வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகள், காளையர்களை கலங்கடித்த நிலையில் களத்தில் நின்று விளையாடியது. சில காளைகள், காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. 

இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப் பணம், வெள்ளிக்காசு, கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவை வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.