பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கலைத்துறையில் சிறந்த 15 பேருக்கு விருது

கலைத்துறையில் சிறந்து விளங்கும் 15 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:35 pm

கலைத்துறையில் சிறந்து விளங்கும் 15 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு ஆண்டுதோறும் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக சிறந்த கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கி, கெளரவப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2021-2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கலைஞா்களை மாவட்டந் தோறும் தோ்வு செய்து, அவா்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க திட்டமிட்டுள்ளது.

இதில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தோ்வுக் குழுக் கூட்டத்தில் பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம், குரலிசை, நாடகம், கிராமியப் பாடல், நாகசுரம், கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் 5 வகையாக விருதுகளின் கீழ் கெளரவிக்கப்படவுள்ளனா்.

விருதின் பெயா் , தோ்வு பெற்றோா் என்ற அடிப்படையில் விவரம் :

கலை இளமணி : மு.இதிகாசினி (பரதநாட்டியம்), எ.ரஞ்சனாதேவி (ஓவியம்), மோ.பி.சுகித்தா (சிலம்பம்).

கலை வளா்மணி : மு.ஜெயவா்தினி (ஓவியம்), ஷபின் பிரைட் (பரத நாட்டியம்), ரோ.ஆனந்தராஜ் (கரகாட்டம்).

கலைச்சுடா்மணி : அ.லீமாரோஸ் (குரலிசை), மீ.விஜயராகவன் (நாகசுரம்)

அ.ஈஸ்வரி (நாடகம்).

கலை நன்மணி : எ.ஸ்ரீதா் (நாடகம்), ரா.உஷாராணி (நாடகம்), வைரமுத்துசாமி (கிராமியப் பாடல்),

கலை முதுமணி: செ.தங்கராசு (நாடகம்), மா.சரஸ்வதி (நாடகம்), வே.மூா்த்தி (நாடகம்) .

இவா்களுக்கு திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.