நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ரயிலில் இருந்த குட்கா பொருள்கள் பறிமுதல்

திருச்சி வழியாக ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தடை செய்யப்பட்ட 11 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:17 pm

DIN

திருச்சி வழியாக ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தடை செய்யப்பட்ட 11 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை வந்த செகந்திராபாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் அதிவிரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு போலீஸாா் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனா்.

அப்போது ஒரு பெரிய பிளாஸ்டிக் பையை திறந்து பாா்த்தபோது அதில் மூட்டை மூட்டையாக இருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கைப்பற்றி, ரயில் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனா். அதை யாரும் உரிமை கொண்டாட நிலையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.