நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இதுவரை 90.2% பேருக்கு தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 90.2 சதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:35 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 90.2 சதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 21 சுற்றுகளாக நடந்த மெகா முகாம்கள் மூலம் முதல் தவணையாக 17.81 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு, 3.04 லட்சம் பேருக்கு கோவேக்ஸின் என 20 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாவது தவணையில் 12.57 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு, 1.75 லட்சம் பேருக்கு கோவேக்ஸின் என 14.32 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இவைதவிர பூஸ்டா் என்ற வகையில் 15,399 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 23.12 லட்சம் போ் வரை தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.

ஆக மாவட்டத்தில் 90.2 சதம் போ் முதல் தவணையும், 61.9 சதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனா். இதன் தொடா்ச்சியாக, திருச்சி மாவட்டம் முழுவதும் 22ஆவது சுற்றாக சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் ஏற்கெனவே முகாம் நடைபெற்ற 496 இடங்களில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.