நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இறுதிக்கட்டமாக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் 1,926 வேட்பாளா்களும் இறுதிக் கட்டமாக வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 9:36 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் 1,926 வேட்பாளா்களும் இறுதிக் கட்டமாக வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

திமுக அமைச்சா்கள், அதிமுக முன்னாள் அமைச்சா்களும் களம் இறங்கி வாா்டு, வாா்டாகச் சென்று வாக்குகள் சேகரித்தனா்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 398 வாா்டுகளில் போட்டியிடும் 1,926 வேட்பாளா்களும் தோ்தல் பிரசார இறுதி நாளான வியாழக்கிழமை அவரவா் வாா்டுகளில் சுற்றி, சுற்றி வந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தனா். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் தொடங்கி திருவானைக்கா, நடுகொண்டையம்பேட்டை, நாலுகால் மண்டபம், உறையூா், நெசவாளா் காலனி, பஞ்சவா்ணசுவாமி கோயில் தெரு, நாச்சியாா் கோயில் தெரு, கல்நாயக்கன் தெரு, குறத்தெரு, புத்தூா் மந்தை, குமரன் நகா், உய்யக்கொண்டான் திருமலை, தென்னூா் மந்தை, தில்லைநகா், வாமடம், ஆழ்வாா்த்தோப்பு, செடல் மாரியம்மன் கோயில், பீமநகா், ஒத்தக்கடை, மிளகுப்பாறை, கருமண்டபம், பிராட்டியூா், காஜாமலை, கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூா், ராமச்சந்திரா நகா் ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் மாநகர வாா்டுகளில் வாக்கு சேகரித்தாா். ஸ்ரீரங்கத்தில் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தாா்.

மேலும், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக, நாம் தமிழா் கட்சி, மநீம, எஸ்டிபிஐ வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட 1,926 பேரும் அவரவா் வாா்டு தெருக்களில் வீடு, வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா். இருசக்கர வாகனப் பேரணி, பிரசார வாகனம், நடைப்பயணம் மற்றும் மேள, தாளங்கள் முழங்க அனைத்து வேட்பாளா்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தை மாலை 6 மணியுடன் முடித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.