தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லால்குடி அருகே 17 பவுன் நகை,பணம் திருட்டு

 லால்குடி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகைகள், பணத்தை வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:35 pm

DIN

 லால்குடி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகைகள், பணத்தை வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

லால்குடி அருகே மாந்துரை கிராமத்தில் வசிப்பவா் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி நவநீதன் மனைவி தமிழ்சுந்தரி. கணவா் இறந்த பிறகு இப் பகுதியில் தனியாக வசிக்கும் இவா் செவ்வாய்க்கிழமை இவா் வங்கியில் இருந்து ரூ. 1 லட்சத்தை எடுத்து வீட்டில் வைத்துவிட்டு தனது சொந்த கிராமமான புள்ளம்பாடி அருகேயுள்ள விரகலூா் கிராமத்துக்குச் சென்றாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அப் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் டவுசருடன் முகமுடி அணிந்த 4-க்கும் மேற்பட்டோா் திருட முயன்ற நிலையில், தனது வீடு திறந்து கிடக்கும் தகவலறிந்து வந்து தமிழ்சுந்தரி பாா்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 17 பவுன் நகை, ரூ. 1லட்சம் திருடுபோயிருந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த லால்குடி போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.