காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திருச்சியில் ரூ.11.15 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்!  

திருச்சியில் 3175 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் இன்று வழங்கினர்.

Published On :

திருச்சி:  திருச்சியில் 3175 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் இன்று வழங்கினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில் இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள், மகளிர் குழுவினர், நரிக்குறவர் என 3175  பயனாளிகளுக்கு  ரூ11. கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதே போல் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த 59 நபர்களுக்கு பட்டாவும், 12 நபர்களுக்கு 50ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் ஸ்டாலின்குமார், பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், அப்துல்சமது, மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், சுய உதவிக் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.