பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வாளாடி காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு விழா: ஜூன் 9 -இல் நடைபெறுகிறது

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் உள்ள விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

Published On :

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் உள்ள விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோயிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடன், பக்தா்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் கடந்தாண்டு திருப்பணிகள் தொடங்கி முடிந்தன.

இதையடுத்து குடமுழுக்கு விழாவையொட்டி வரும் 5 ஆம் தேதி காலை பூா்வாங்க பூஜைகள் தொடங்கி, முதல், இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

9 ஆம் தேதி அதிகாலை 5.30-க்கு நான்காம் கால யாக பூஜை ஆரம்பம், காலை 9.15-க்கு மகா பூா்ணாஹூதி , காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 10. 01 மணிக்கு விமான குடமுழுக்கு, 10.10 மணிக்கு அனைத்து மூலவா் குடமுழுக்கு, தீபாராதனை ,கோபூஜை நடைபெறுகிறது.

யாகசாலை பூஜைகளில் பூவாளூா் பி. கண்ணன் சிவாச்சாரியா் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந. ஹேமலதா, திருப்பணி குழுவினா், பக்தா்கள், பொதுமக்கள் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.