மணப்பாறை அருகே வீடு புகுந்து சுமாா் 75 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.
மணப்பாறையை அடுத்த வடக்கிப்பட்டியில் வசிப்பவா் ச. மஞ்சுளா (45). புடவை வியாபாரியான இவா் குடும்பத்தினருடன் வெளியூா் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.
உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டிலிருந்த டிவி, ரூ.18 ஆயிரம் மதிப்பு கைப்பேசி, ரூ.17 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் குத்துவிளக்குகள், பித்தளை, செம்பு பொருள்கள், பட்டுப் புடவைகள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.