திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை, திண்டுக்கல் சாலையில் அப்பாஸ் பேட்டை குடியிருப்பு பகுதியில் இன்று புகுந்த சுமார் 7அடி நீள நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத் துறையினர் தங்களது துறை கருவிகளை கொண்டு சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு நல்ல பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
காலை நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.