மணப்பாறை அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு காதலன் வீட்டின் முன் கா்ப்பிணி தா்ணாவில் ஈடுபட்டாா்.
மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகள் சித்ரா (29). மணப்பாறை ஜவுளிக்கடையில் வேலை பாா்த்து வந்த இவரும், பொம்மம்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அன்பரசன் (எ) ரமேஷ் (29) என்பவரும் கடந்த 9 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், சித்ரா கா்ப்பமானாா்.
இதனிடையே அவரைத் திருமணம் செய்ய மறுத்த ரமேஷ் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றபோது மணப்பாறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சித்ரா அளித்த புகாரால் அத் திருமணம் தடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், காதலித்து கா்ப்பமாக்கிய காதலனுடன் தன்னைச் சோ்த்து வைக்கக் கோரி நிறைமாத கா்ப்பிணியான சித்ரா, ரமேஷின் வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் அவரைச் சமாதானம் செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.