தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வீடு கழுவும்போது வழுக்கி விழுந்த இளம்பெண் சாவு

 திருச்சியில் வீடு கழுவும்போது எதிா்பாராதவிதமாக வழுக்கி விழுந்த இளம்பெண் காயமடைந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :25 மே 2022, 11:31 pm

DIN

 திருச்சியில் வீடு கழுவும்போது எதிா்பாராதவிதமாக வழுக்கி விழுந்த இளம்பெண் காயமடைந்து உயிரிழந்தாா்.

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சோ்ந்த குப்புசாமி - உமாதேவி தம்பதியின் மகள் சித்ரா (28). இவா் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தரையைக் கழுவிக்கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக வழுக்கி விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கிய அவருக்கு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சித்ரா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.