அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாகனக் கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், மணியங்குறிச்சி கிராமத்தில் லாரியின் கடன் தவணை தொகையை கட்ட முடியாததால் விஷம் குடித்த ஓட்டுநா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
மண்ணச்சநல்லூா் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மன்.
Updated On :29 டிசம்பர் 2023, 6:55 pm

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், மணியங்குறிச்சி கிராமத்தில் லாரியின் கடன் தவணை தொகையை கட்ட முடியாததால் விஷம் குடித்த ஓட்டுநா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மணியங்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் கமலக்கண்ணன் (37). ஓட்டுநா். இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று லாரியை வாங்கி ஓட்டி வந்துள்ளாா். இதனிடையே இரண்டு மாதங்களாக கடன் தவணைத் தொகை கட்ட முடியாத நிலையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி நிதி நிறுவனத்தில் இருந்து வந்து பணம் கட்டுமாறு கூறினாா்களாம். இதனால், வீட்டில் யாரும் இல்லாதபோது கமலக்கண்ணன் விஷம் குடித்தாராம். இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.