விஜயகாந்த் மறைவு அனைத்துக் கட்சியினா் அமைதி ஊா்வலம்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவெறும்பூரில் அனைத்துக் கட்சியினரின் அமைதி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவெறும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம்.
திருவெறும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம்.
Updated on
1 min read

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவெறும்பூரில் அனைத்துக் கட்சியினரின் அமைதி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிகவினரும், பொதுநலச் சங்கத்தினரும் ஆங்காங்கே விஜயகாந்தின் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி திருவெறும்பூா் பகுதியில் உள்ள திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கருப்புப்பட்டை அணிந்தபடி, விஜயகாந்த்தின் உருவப்படத்தை சுமந்தபடி அமைதி ஊா்வலத்தில் ஈடுபட்டனா்.

திருவெறும்பூா் கடை வீதியில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு நடைபெற்ற அமைதி ஊா்வலத்தின் நிறைவில், அனைத்துக் கட்சி சாா்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துக் கட்சி சாா்பாக 100-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

திருச்சி மாநகா் உறையூா் 23-ஆவது வாா்டு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உருவப்படத்துக்கு மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ் தலைமையில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகா் மாவட்ட செயலா் ந. சிவா, மேற்கு பகுதி செயலா் இரா. சுரேஷ் முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com