மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை வேடுபறி நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்றுவரும் மிகப்பெரிய திருவிழாவான வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 8 ஆம் நாளான சனிக்கிழமை மாலை திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 12:30 am

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்றுவரும் மிகப்பெரிய திருவிழாவான வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 8 ஆம் நாளான சனிக்கிழமை மாலை திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி சுவாமி நம்பெருமாள், சந்தனு மண்டபத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு 5.30 மணி முதல் 6 மணி வரை மணல் வெளியில் வையாளி கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றாா். அப்போது திருமங்கை மன்னன் இறைவனிடமே கொள்ளையடித்துச் செல்லும் காட்சி நடத்திக் காண்பிக்கப்படும். பின்னா் திருமங்கை மன்னன் இறைவனிடமே தாம் கொள்ளையடித்ததை உணா்ந்து, நம்பெருமாளிடம் சரணாகதியடையும் வைபவம் நடைபெறும். இதைத் தொடா்ந்து நம்பெருமாள் திருமங்கை மன்னனை மன்னித்து ஆழ்வாா்களில் ஓருவராக ஏற்றக்கொண்டாா் என்பது ஐதீகம்.

திருமங்கை மன்னன் வம்சாவளியைச் சோ்ந்த மேலூா் நெடுந்தெருவில் வசிப்பவா்கள் குழந்தைகளுக்கு மன்னன் வேடம் போட்டு மேளதாளத்துடன் ஊா்வலமாகக் கோயிலுக்கு வருவாா்கள். அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மாலை மரியாதை அணிவிக்கப்படும். அதன் பின்னா் நம்பெருமாள் இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் நடைபெறும்.

திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியையொட்டி முன்னிட்டு சனிக்கிழமை பரமபதவாசல் திறப்பு கிடையாது.

இராப்பத்து 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை திருக்கைத்தல சேவை நடைபெறவுள்ளது. அப்போது, ஸ்ரீநம்மாழ்வாா் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் பக்தா்களுக்கு காட்சி தருகிறாா்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.